செந்தில் பாலாஜி பதவி நீக்கம் விவகாரம்: அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனை செய்ய கவர்னர் முடிவா?

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:44 IST)
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில் அவரை பதவி நீக்கம் செய்து நேற்று ஆளுநர் ரவி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஆளுநர் ரவி இந்த விவகாரம் குறித்து அட்டர்னி ஜெனரல் அவர்களிடம் ஆலோசனை பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கிரிமினல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதை சுட்டிக்காட்டிருந்த ஆளுநர் அவரை பதவி நீக்கம் செய்தார். 
 
இதற்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து இன்று அவர் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை கேட்க இருப்பதாகவும் அதன் பிறகு இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments