Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாராலும் நாங்கள் மிரட்டப்படவில்லை: ஆளுனர் குற்றச்சாட்டுக்கு துணை வேந்தர்கள் பதில்..!

Mahendran
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (15:34 IST)
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் 2 நாள்கள் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை இன்று தொடங்கினார். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
 
பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், மாநாட்டில் பங்கேற்க முடியாது என மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் துணை வேந்தர்களை, சிறப்பு குழுவின் மூலம் மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
 
இதனை எதிர்த்து கூறிய சில துணை வேந்தர்கள், தமிழ்நாடு அரசின் எந்த அதிகாரிகளாலும் நாங்கள் மிரட்டப்படவில்லை என விளக்கினர். மேலும்,  'ஆளுநரின் அழைப்பில் நடைபெறும் மாநாட்டிற்கு நாங்கள் செல்ல விரும்பவில்லை' என தெரிவித்தனர்.
 
மகளின் திருமண காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ரவி, மாநாட்டில் பங்கேற்கவில்லை. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெநாதன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் காரணமாக, அவர்  மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி? அமைச்சரவை மாற்றமா?

ஒரே நேரத்தில் 2 காதலிகளுக்கு தாலி கட்டிய வாலிபர்.. மணமகள்கள் மகிழ்ச்சி.!

திமுகவுக்கு அடுத்த சிக்கல்: `சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து..!

100 % தேர்ச்சி.. மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்! - அன்பில் மகேஸ் அசத்தல் அறிவிப்பு!

சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்