Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (15:46 IST)
அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


 

 
சசிகாலா எதிராக தீர்ப்பு வந்த பின்னர் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக  இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 
 
இந்நிலையில் ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் சசிகலாவால் முதல்வராக பதவி ஏற்க முடியாமல் போனது. இதையடுத்து அதிமுக சார்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
எடப்பாடி பழனிச்சாமி 12 அமைச்சர்களுடன் ஆளுநரை சந்திக்க உள்ளார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments