தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

Webdunia
புதன், 5 மே 2021 (13:51 IST)
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் ஆட்சி அமைக்க இன்று காலை ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் என்பதும் தெரிந்ததே
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில மணி நேரத்தில் ஆட்சி அமைக்க திமுகவுக்கு ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முக ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்
 
மேலும் ஆட்சி அமைக்க அழைப்பு கொடுப்பதற்கான கடிதத்தை ஆளுநரின் செயலாளர் அனந்தராவ் படேல் அவர்கள் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். இதனை அடுத்து முக ஸ்டாலின் விரைவில் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments