Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஓ.பி.எஸ் ராஜினாமா ஏற்பு - கவர்னர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (11:54 IST)
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.


 

 
நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அவசரமாக சென்னை திரும்பிய தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் ராவ், ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும், மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வராக தொடர வேண்டும் என ஆளுநர் பன்னீர் செல்வத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். 
 
எனவே, தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கும் வரை, பன்னீர் செல்வமே முதல்வராக தொடர்வார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments