Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை - இயக்குநர் உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை - இயக்குநர் உத்தரவு
, சனி, 24 அக்டோபர் 2015 (16:07 IST)
தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

 
அரசு அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. 
 
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில், ”அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, வெளிநாடு செல்ல முடியும்.
 
இந்த அனுமதியை பெற, தங்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil