Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சாரத்திற்கு கிளம்பிய கமல்; அனுமதி மறுத்த அரசு! – ஏற்றுக் கொண்ட மய்யம்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (11:35 IST)
இன்று முதல் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்திருந்த நிலையில் பிரச்சாரம் செய்ய அரசு அனுமதி மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக களம் காணும் கமல்ஹாசன் இன்று மதுரையிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

மதுரையின் நான்கு இடங்களில் அவர் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் கொரோனா காரணமாக முக்கிய நகரப்பகுதிகளில் மக்களை கூட்டவும், பிரச்சாரம் செய்யவும் அரசு அனுமதி மறுத்துள்ளது.

அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ள கமல்ஹாசன் “முக்கிய நகரப்பகுதிகளில் பிரச்சாரம் செய்ய அரசு அனுமதி மறுத்துள்ளது. அரசின் அறிவுறுத்தலை ஏற்று மய்யம் மற்ற இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments