Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளி மனைவியின் செல்போன் சிக்னல்! – கிராமமே தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம்!

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (13:11 IST)
கொரோனா பாதிக்கப்பட்டவர் மனைவியின் செல்போன் சிக்னல் கண்டறியப்பட்ட கிராமம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற ஒருவர் சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அவர்களை அறிவுறுத்தியிருந்த நிலையில், அவர் மனைவி சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாளேதோட்டம் என்னும் கிராமத்திற்கு சென்றதாக தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து போச்சம்பள்ளி போலீஸார் பாளேதோட்டத்தில் விசாரித்ததில் அவர் அங்கு இல்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது அவர் தான் இதுவரை கிருஷ்ணகிரிக்கு சென்றதே இல்லை என கூறியுள்ளார். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் அவரது மொபைல் எண் சிக்னல் பாளேதோட்டத்து பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், பாளே தோட்டம் கிராமமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments