Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 15ஆம் தேதி இறைச்சி கடைகளை மூட வேண்டும்: அரசின் அதிரடி உத்தரவு..!

Siva
திங்கள், 13 ஜனவரி 2025 (18:01 IST)
பொங்கலுக்கு மறுநாள், அதாவது ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால், அன்றைய தினம் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, ஜனவரி 15 ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சி கூடங்களை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி  கூடங்கள் மூட வேண்டும் என்று அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த உத்தரவின் அடிப்படையில் இறைச்சி கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்,  திருவள்ளுவர் தினம், வள்ளலார் பிறந்த தினம் உள்பட சில தினங்களில் இறைச்சி கடைகள் மூடப்படுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments