Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி – வெளியானது அரசாணை...

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (13:59 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகல் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியப் பண்டிகைகளின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கம். ஆனால் இடையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்துவதாக பீட்டா போன்ற அமைப்புகள் வைத்த குற்றச்சாட்டால் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

அதனையடுத்து மக்கள் மெரினாவில் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தால் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதிய சட்டம் ஒன்றை அமைத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்தது. அதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த தேதி வாரியாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்  3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 15-ம் தேதி மதுரை அவனியாபுரத்திலும், 16-ம் தேதி- பாலமேட்டிலும் 17-ம் தேதி- அலங்காநல்லூரில்ம் நடத்த அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments