Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ராஜினாமா?: தலைமை செயலகத்தில் பரபரப்பு!

அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ராஜினாமா?: தலைமை செயலகத்தில் பரபரப்பு!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (09:00 IST)
தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து வந்த ஷீலா பாலகிருஷ்ணன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றனர். இதனால் தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
கடந்த 2012-ஆம் அண்டு தமிழகத்தின் 41-வது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டவர் ஷீலா பாலகிருஷ்ணன். இவரது பதவிக்காலம் 2014-ஆம் ஆண்டுடன் முடிவடைந்து அவர் பணி ஓய்வு பெற்றார்.
 
ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசின் ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கி அதில் அவரை உட்கார வைத்தார். ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அரசு இயந்திரமே இவரால் தான் இயங்கியது.
 
கிட்டத்தட்ட நிழல் முதல்வராகவே வலம் வந்தார் இவர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கி வந்தார் ஷீலா பாலகிருஷ்ணன்.
 
அவரது பணிக்காலம் வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் அவர் அதற்கு முன்னதாகவே திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக வரும் தகவலால் பல சந்தேகங்கள் எழுகின்றன. இதனால் தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments