Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

27 பெண்களை பலாத்காரம் செய்து ஆபாசப்படம் எடுத்த சிவராஜ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

27 பெண்களை பலாத்காரம் செய்து ஆபாசப்படம் எடுத்த சிவராஜ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
, வெள்ளி, 31 அக்டோபர் 2014 (13:30 IST)
தர்மபுரி மாவட்டத்தில் 27 பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, ஆபாசப்படம் எடுத்து மிரட்டி வந்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
 
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ், தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்க பெண்களை தனது பண்ணைக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் செக்ஸ் உறவு மேற்கொண்டுவந்தார். மேலும், அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோ பதிவு செய்து ரசித்து வந்தார்.
 
ஒரு கட்டத்தில் தன்னிடம் வர மறுத்த பெண்களிடம் அந்த வீடியோ விபரத்தைக் கூறி மிரட்டி வரவழைத்து செக்ஸில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சம்பவம் வெளியே தெரியவந்ததும் பாலக்கோடு காவல்துறையினர் சிவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது சில பெண்கள் புகார் செய்தனர். விசாரணையில் அவர் 27 பெண்களை பலாத்காரம் தெரியவந்தது.
 
நிதி நிறுவன அதிபர் சிவராஜின் செக்ஸ் சமாச்சாரங்கள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தர்மபுரி கிளை சிறையில் இருக்கும் அவருக்கு சிறை வளாகத்துக்கே வந்து நீதிபதி காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் சிவராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தர்மபுரி போலீஸ் எஸ்.பி. லோகநாதன், மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனுக்கு பரிந்துரை செய்தார்.
 
இதையடுத்து நிதி நிறுவன அதிபர் சிவராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் இருக்கும் சிவராஜிடம் அந்த உத்தரவு வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil