கோமதி கிழிந்த காலணி விவகாரத்தில் திடீர் திருப்பம்

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (18:39 IST)
தமிழகத்தை சேர்ந்த தங்கமங்கை கோமதி, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம்  வென்றதை விட அவருக்கு அரசு உதவி செய்யவில்லை, கிழிந்த காலணியை பயன்படுத்தினார் போன்ற சர்ச்சைகள் பெரிதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டன. சமூக வலைத்தள திடீர் போராளிகள் அரசுக்கு எதிராகவும், கோமதிக்கு ஆதரவாகவும் சில கருத்துக்களை பதிவு செய்தனர். 
 
இந்த நிலையில் வருமான வரித்துறையில் ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்கும் கோமதியிடம் ஒரு காலணி வாங்க காசில்லையா? அரசு உதவி செய்யாமல் எப்படி அவரால் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள முடியும் என எதிர்த்தரப்பினர் வாக்குவாதம் செய்ய, இருதரப்பினர்களும் சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக மோதி வந்தனர்.
 
இந்த நிலையில் 'அதிர்ஷ்டமான காலணி என்பதால் பழைய காலணியை பயன்படுத்தியதாகவும், என்னிடம் காலணி இல்லை என்பதில் உண்மையில்லை' என்றும் கோமதி மாரிமுத்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். 
 
தங்கம் வென்ற வீராங்கனையை வைத்து அரசியல் மற்றும் ஜாதி பிரச்சனை செய்து வருபவர்களுக்கு கோமதியின் இந்த விளக்கம் தக்க பதிலடியாக இருந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments