Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமதி கிழிந்த காலணி விவகாரத்தில் திடீர் திருப்பம்

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (18:39 IST)
தமிழகத்தை சேர்ந்த தங்கமங்கை கோமதி, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம்  வென்றதை விட அவருக்கு அரசு உதவி செய்யவில்லை, கிழிந்த காலணியை பயன்படுத்தினார் போன்ற சர்ச்சைகள் பெரிதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டன. சமூக வலைத்தள திடீர் போராளிகள் அரசுக்கு எதிராகவும், கோமதிக்கு ஆதரவாகவும் சில கருத்துக்களை பதிவு செய்தனர். 
 
இந்த நிலையில் வருமான வரித்துறையில் ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்கும் கோமதியிடம் ஒரு காலணி வாங்க காசில்லையா? அரசு உதவி செய்யாமல் எப்படி அவரால் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள முடியும் என எதிர்த்தரப்பினர் வாக்குவாதம் செய்ய, இருதரப்பினர்களும் சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக மோதி வந்தனர்.
 
இந்த நிலையில் 'அதிர்ஷ்டமான காலணி என்பதால் பழைய காலணியை பயன்படுத்தியதாகவும், என்னிடம் காலணி இல்லை என்பதில் உண்மையில்லை' என்றும் கோமதி மாரிமுத்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். 
 
தங்கம் வென்ற வீராங்கனையை வைத்து அரசியல் மற்றும் ஜாதி பிரச்சனை செய்து வருபவர்களுக்கு கோமதியின் இந்த விளக்கம் தக்க பதிலடியாக இருந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்க மொழி பிரச்சனையை கையில் எடுக்கும் மம்தா.. பாஜக பதிலடி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments