Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் திமுக பிரம்மாண்ட தோல்வியை சந்திக்கும் - மு.க.அழகிரி

Webdunia
திங்கள், 5 மே 2014 (17:48 IST)
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மூன்றிலிருந்து ஐந்து தொகுதிகள்தான் கிடைக்கும் என்று அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மு.க.அழகிரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
 
திமுகவுக்கு எதிராக நான் வெளிப்படையாக பேசுவது கட்சியை பலவீனப்படுத்தாதா என்று கேட்கிறார்கள். ஆனால் என்னை அவர்கள் பலவீனப்படுத்துகிறார்கள். நான் 'பவர்புல்லாக' வளர்ந்து வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். என்னிடம் யாரும் பேசுவதில்லை.
 
நாடாளுமன்ற தேர்தலில், பலமுனை போட்டியால் திமுகவுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இது அதிமுகவுக்கு ஆதாயமாக முடியும். திமுக மூன்று அல்லது அதிகபட்சம் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும். திமுக பிரமாண்டமான அளவில் இந்தத் தேர்தலில் தோல்வியடையும் என்பது எனது கணிப்பு என்று தெரிவித்தார்.
 
இதுகுறித்து திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் அதே டிவிக்கு அளித்த பேட்டியில், "அதிமுக ஆதரவு பத்திரிகைகளில் வெளியாகும் செய்தியை படித்துவிட்டு அழகிரி அவ்வாறு கூறியுள்ளார். உண்மை நிலவரம் அதுவல்ல. திமுக இந்தத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். அதிமுக ஆதரவு இல்லாத வேறு பத்திரிகைகள் திமுக பெரிய வெற்றியை பெறும் என்று கூறியுள்ளன. அதையும் அழகிரி படிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

கேரளாவில் மேகவெடிப்பால் கனமழை: 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

பிரியாணி சாப்பிட்ட பெண் பலி.! 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு..!

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் கடும் போட்டி!

தமிழக முதல்வர் சுப.உதயகுமாரின் திறந்த மடல்.

Show comments