Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோகுல்ராஜ் கொலை வழக்கு: தலைமறைவான யுவராஜூக்கு பிடிவாரண்ட்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: தலைமறைவான யுவராஜூக்கு பிடிவாரண்ட்
, திங்கள், 5 அக்டோபர் 2015 (13:43 IST)
கோகுல்ராஜ் கொலைவழக்கில் தலைமறைவாக இருக்கும் யுவராஜுக்கு நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 


 
 
நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோட்டைச் சேர்ந்த பொறியில் பட்டதாரி கோகுல்ராஜ் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.  இந்த வழக்கில் திருச்சங்கோட்டைச் சேர்ந்த  யுவராஜ் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 
 
ஆனால் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காத யவுராஜ் , கேரளா போன்ற பல வெளிமாநிலங்களில் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
 
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா  அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். 
 
உயர்அதிகாரிகளின் நிர்பந்தத்தால் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக சர்ச்சை வெடித்தது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் மற்றும் ஊடகங்களின் வாயிலாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை யுவராஜ் கூறி வருகிறார்.
 
இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் யுவராஜூக்கு பிடிவாரண்ட் பிறக்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil