Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோகுல்ராஜ் கொலை வழக்கு: 2வது குற்றவாளியும் சரண்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: 2வது குற்றவாளியும் சரண்
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (11:57 IST)
கோகுல்ராஜ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியும் யுவராஜின் கார் ஓட்டுநருமான அருண் என்பவர் கரூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.


 
 
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யுவராஜ் கடந்த மூன்று மாதங்களாக தலைமறைவு வாழ்க்கையை நடத்தி வந்தார்.
 
வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் பிடி இறுகுவதை உணர்ந்த யுவராஜ், நேற்று சரணடைந்தார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்நிலையில் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் அருண் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் இன்று  கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரிடம் நீதிபதி பத்மநாபன் விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரிடம் சரணடைந்துள்ள அருண், சங்ககிரியை சேர்ந்தவர் ஆவார்.

Share this Story:

Follow Webdunia tamil