Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வயது சிறுமியின் கையைப் பிடித்து இழுத்த சாமியாருக்கு தர்ம அடி: கோவையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (16:29 IST)
கோவையில் பள்ளி மாணவியின் கையைப் பிடித்து இழுத்த சாமியாரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.


 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கணுவாய் பகுதியில் உள்ள பெரியகாண்டியம்மன் கோவிலில் நேற்று மகாளய அமாவசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சாமியார்கள் பங்கேற்றனர்.  பூஜைகள் முடிந்து இன்று சாமியார்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கணுவாய் அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்த 10 வயது பள்ளிச் சிறுமியை கையைப் பிடித்து இழுத்து சாமியார் ஒருவர் ரகளை செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கதற் தொடங்கினார். சிறுமியின் அலறல் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அந்தச் சாமியாரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சாமியாரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராஜபாளையத்தை சேர்ந்தவர் என்பதும், ஜீவானந்தம் (எ) மருகுசாமி (50) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments