Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆடுகளை கடித்துக் குதறிய சிறுத்தை: பொதுமக்கள் பீதி

Webdunia
திங்கள், 4 மே 2015 (15:20 IST)
பேர்ணாம்பட்டு அருகே தமிழக அரசு இலவசமாக கொடுத்த ஆடுகளை சிறுத்தை கடித்துகொன்று அட்டகாசம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பேரணாம்பட்டு அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமாக 30 ஆடுகள் உள்ளன.
 
இவருக்கு சொந்தமான 15 ஆடுகளும் மேலும் அதே பகுதியை சேர்ந்த டேவிட் , விக்டோரியா ஆகியோரின் ஆடுகள் உள்பட மொத்தம் 30 ஆடுகளை பன்னீர்செல்வம் பொறுப்பில் விட்டுள்ள நிலையில் அவர்கடந்த 6 மாத காலமாக பராமரித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், இவர் வழக்கம்போல் அருகிலுள்ள மலைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டிற்கு அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துள்ளார்.
 
அப்போது, அந்த பட்டிக்கு நள்ளிரவில் வந்த சிறுத்தை 10 ஆடுகளை கடித்து கொன்றுள்ளது.மற்ற ஆடுகள் சிறுத்தைக்கு பயந்து மலைப் பகுதிக்குள் ஓடிவிட்டன. காலையில் பட்டியில் ஆடுகள் சிறுத்தை கடித்து இறந்துள்ளதைப் பார்த்த பன்னீர்செல்வம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
 
இதைத் தொடர்ந்து, அங்குவந்த வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து அதை தேடிவருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments