Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'GO BACK MODI' - பழவேற்காடு ஏரியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்..!!

Senthil Velan
புதன், 28 பிப்ரவரி 2024 (15:45 IST)
மீனவர்கள் கைது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பழவேற்காடு ஏரியில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கும் எதிர்ப்பு தெரிவித்து GO BACK MODI என அவர்கள் முழக்கமிட்டனர். 
 
ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாள் போராட்டம் அறிவித்திருந்தனர். 
 
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி கருப்பு கொடிகளை ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 
 
கடந்த 10 ஆண்டுகளாக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாக குற்றம் சாட்டினர். தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கும் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி GO BACK MODI என முழக்கமிட்டனர். 

ALSO READ: விளவங்கோடு தொகுதி காலி..! அரசிதழில் வெளியீடு..!!
 
கடல் தாமரை என்ற அமைப்பை உருவாக்கி மீனவர்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த பாஜக அதனை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments