Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்ட தேமுதிகவுக்கு கல்தா, கேட்காத வாசனுக்கு எம்பி பதவி: அதிமுகவின் அதிர்ச்சி முடிவு

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (07:38 IST)
வரும் மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் ராஜ்யசபா தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 3 எம்பி பதவி திமுகவுக்கும் 3 எம்பி பதவி அதிமுகவுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவர் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முக ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் யாருக்கும் எம்பி பதவி அளிக்காமல் திமுக வேட்பாளர்களையே மூவரையும் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்வி அரசியல் வட்டாரத்தில் இருந்த நிலையில் தற்போது அதற்கு கிட்டத்தட்ட விடை கிடைத்துள்ளது. அதிமுக வேட்பாளராக கேபி முனுசாமி, தம்பித்துரை ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான தமாக தலைவர் ஜிகே வாசன் அவர்களுக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஒரு ராஜ்யசபா தொகுதி வேண்டும் என தேமுதிமுக ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தேமுதிகவுக்கு கல்தா கொடுத்துவிட்டு ராஜ்யசபா எம்பி பதவியை கேட்காத ஜிகே வாசனை அதிமுக தலைமை தேர்வு செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. மேலும் இதனால் தேமுதிக பெரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments