Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டு வாங்கனும்... ஜி.கே.வாசன் அட்வைஸ்!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (11:48 IST)
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு முழு நிவாரணம் வேண்டும் என தனது அறிக்கையில் கோரியுள்ளார். 
 
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நிவர் புயலால் ஏற்பட்ட மழை, காற்றினால் கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 
 
விவசாயிகளின் நெல், கரும்பு, வாழை, தென்னை சேதமுற்றும், கால்நடைகள் பாதிக்கப்பட்டும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் சேத மதிப்பீடுகளை வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறையின் மூலம் ஆய்வு செய்து கணக்கிட்டு வருகிறது.
 
இந்நிலையில் நிவர் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் தமிழகம் வருகின்றனர். மத்திய குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிறகு ஓர் அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் கொடுக்கும்.
 
இந்த அறிக்கையானது தமிழகத்தில் நிவர் புயலால் அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும். தமிழக அரசு நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசிடம் நிதி பெற வைக்கும் கோரிக்கைக்கு ஏற்ப முழு நிவாரண நிதியையும் வழங்க வேண்டும் என கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments