Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆங்கிலத்துக்கு பயந்து சிறுமி தற்கொலை

ஆங்கிலத்துக்கு பயந்து சிறுமி தற்கொலை
, வெள்ளி, 29 ஜூலை 2016 (12:08 IST)
திருவண்ணாமலை அருகே ஆங்கிலம் தெரியவில்லை என்று 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.


 

 
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நாத்தூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் பவானி(16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் பவானி, பெற்றோர்கள் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்டார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் பாவனியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பவானி, ஆங்கிலப் பாடத்தில் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்களே எடுத்து வந்ததாகவும், ஆங்கிலம் கற்றுத் தரும் மாணவன் திட்டியதாலும், பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறி வந்துள்ளார்.
 
மேலும் காவல் துறையினர் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் உயிருக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை