Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

7ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

7ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
, வெள்ளி, 3 ஜூன் 2016 (15:33 IST)
7 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவண்ணாமலை அருகே உள்ள மழுவம்பட்டு கிராமத்தில், தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள, கர்நாடகா மாநிலம், பெங்களூரில் வசிக்கும் வேணு தனது குடும்பத்துடன் வந்தார்.
 
அப்போது, அவருடன் அவரது மகள் விறகு எடுக்கச் சென்றுள்ளார். இந்த தருணத்தை பயன்டுத்தி, பன்னரிநாதன் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்துள்ளான்.
 
தனது குழந்தையை காணாமல் தவித்த வேணு, இது குறித்து , காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் வழக்கு பதிவு விசாரணை நடத்திய போது, அந்த சிறுமி கரும்பு தோட்டத்தில் சடலமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
திருமணம் நடக்க இருந்த வீட்டில் நடந்த சம்பவத்தால் அந்தக் குடும்பத்து மக்களும், கிராம மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து: லாரி-பேருந்து மோதியதில் 8 பேர் பலி