Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி கொலை வழக்கு; கொந்தளித்த யுவன்சங்கர் ராஜா!

Sinoj
வியாழன், 7 மார்ச் 2024 (19:04 IST)
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் 2 பேரை போலீஸார் கைது, அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இன்று குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில்,சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;  ''இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராத பிரச்சனையாக உள்ளது.28.9 சதவீத குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர். குழந்தைகளுக்கு Good touch, Bad touch கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியமாகும்.

புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்பத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். பாதுகாப்பான நாடாகவும், சமூகமாகவும் வளர்வோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்