Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியிடம் ஆபாசப் படம் காண்பித்து பாலியல் பலாத்காரம் - பல்கலைக்கழக பேராசிரியர் கைது

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2015 (12:30 IST)
13 வயது சிறுமியிடம் ஆபாச படம் படம் காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
 
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த மதியழகன் (59) என்பவர் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி டியூசன் படித்து வந்துள்ள்ளார்.
 

 
இந்நிலையில், மதியழகன் அந்த சிறுமியை பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறைக்கு அழைத்து சென்று ஆபாச படங்களை காண்பித்து, அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். மேலும் நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்.
 
இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமியின் பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இதை கவனித்த அந்த சிறுமி நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளான தகவலை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
 
அதைத்தொடர்ந்து புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர், இது குறித்து போலீஸ் ஐ.ஜி. பிரவீர் ரஞ்சனிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் லாஸ்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி மதியழகனை கைது செய்தனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!