Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய எழுத்தாளர்! – வாழ்த்து மழையில் கீதாஞ்சலி ஸ்ரீ!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (11:07 IST)
இலக்கிய உலகில் புகழ்வாய்ந்த உச்ச விருதாக கருதப்படும் புக்கர் விருது இந்த முறை இந்திய எழுத்தாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களுக்கு ஆஸ்கர் போல, இசைக்கு கிராமி விருது போல இலக்கியத்திற்கு புக்கர் பரிசு பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு சர்வதேச புக்கர் பரிசு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய ரெட் சமாதி என்ற நூலுக்கு கிடைத்துள்ளது. இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் டோம்ப் ஆஃப் சாண்ட் என்ற பெயரில் டெய்சி ராக்வெல்லால் என்பவர் மொழிப்பெயர்த்திருந்தார்.

இந்த விருதின் மூலம் முதன்முறை புக்கர் பரிசு பெறும் இந்திய எழுத்தாளராகவும், இந்திய முதல் பெண் எழுத்தாளராகவும் கீதாஞ்சலி ஸ்ரீ சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments