Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பேச்சாளரை தீவிரவாதி பட்டியலில் சேர்க்க சொல்லும் காயத்ரி ரகுராம்!

Webdunia
திங்கள், 4 மே 2020 (15:54 IST)
திமுக இளம் பேச்சாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னாவை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் பாஜக வைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

திமுகவைச் சேர்ந்த பேச்சாளரான தமிழன் பிரசன்னா ஆவேசமாகவும் உணர்ச்சி பெருக்கோடும் பேசுவதில் வல்லவர். அதற்காக அவருக்கு சமூகவலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதே போல எதிர்ப்பாளர்களும் அதிகம். இந்நிலையில் சில தினங்களுக்கும் முன்னர் அவர் பிரதமர் மோடி குறித்து பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

அவரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் காயத்ரி ரகுராம் ‘திமுக பிரசன்னா பேச்சு சுதந்திரமா? அல்லது அரசியலமைப்பிற்கு எதிரானதா? அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? திமுக பிரசன்னா பேச்சு பயங்கரவதுகள் எப்படி அப்பாவி மக்களை மூளை சலவை செய்வதற்கு பேசுவார்களோ அப்படி உள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும், அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். நடவடிக்கை எடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராமின் கருத்துக்கு பாஜக ஆதரவாளர்களிடம் இருந்து ஆதரவும், திமுக ஆதரவாளர்களிடம் இருந்து எதிர்ப்பும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments