Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டரிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்...

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (12:49 IST)
பலரும் தனக்கு எதிராகவே எப்போதும் கருத்து தெரிவிப்பதால், நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் டிவிட்டரிலிருந்து வெளியேறியுள்ளார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பெயரை கெடுத்துக்கொண்டவர் காயத்ரி ரகுராம். குறிப்பாக, அவர் ஓவியாவிடம் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் அவர் மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் இட்ட அனைத்து பதிவுகளையும் நெட்டிசன்கள் கழுவு ஊத்தினர்.
 
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த காயத்ரி “இனிமேல் கெட்ட வார்த்தை பேசினால் அவர்களுக்கு எதிராக சைபர் கிரைமிடம் புகார் கொடுப்பேன்” என கொதித்தெழுந்தார்.
 
அந்நிலையில், அவரை போலீசார் கைது செய்தது போல் ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால், தான் கடந்த 25 நாட்களாக அமெரிக்காவில் இருப்பதாகவும், இது வதந்தி எனவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இதை செய்கிறது எனவும் அவர் கூறினார். 

 
இந்நிலையில், இனிமேல் எந்த டிவிட்டும் போட மாட்டேன். அதேபோல், எனக்கு ஆதரவு இல்லாதபோது, யாருக்கும் என்னுடைய ஆதரவும் இல்லை. இதுதான் என் கடைசி டிவிட். நான் டிவிட்டரிலிருந்து வெளியேறுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments