Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டர் வெடிப்பு மரணங்கள்! இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம்!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (08:47 IST)
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஏற்பட்ட சிலிண்டர் வெடித்த விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விபத்தில் 346 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 96 பேர் ஆண்கள், 250 பெண்கள் ஆவர். இரண்டாவது இடத்தில் கர்நாடகமும், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளன.

மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாமல் இருப்பதே இதுபோன்ற விபத்துகள் அதிகரிக்க காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments