Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டர் வெடிப்பு மரணங்கள்! இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம்!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (08:47 IST)
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஏற்பட்ட சிலிண்டர் வெடித்த விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விபத்தில் 346 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 96 பேர் ஆண்கள், 250 பெண்கள் ஆவர். இரண்டாவது இடத்தில் கர்நாடகமும், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளன.

மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாமல் இருப்பதே இதுபோன்ற விபத்துகள் அதிகரிக்க காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments