Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக விழாவில் வெடித்த கேஸ் பலூன்கள்! – சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்!

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (08:48 IST)
சென்னையில் உள்ள பாடியில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கேஸ் பலூன் வெடித்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கடந்த வியாழன் முதலாக பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை பாடியில் மோடியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கும் விழாவிற்கு அப்பகுதி பாஜக பிரமுகர் பிரபாகரன் என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் விழாவை சிறப்பிக்க 1000 கேஸ் பலூன்களை வானில் பறக்க விடவும் திட்டமிட்டுள்ளனர். கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்தபோது அதன் தீப்பொறிகள் பலூன்களில் பட்டதால் கேஸ் பலூன்கள் வெடித்து சிதறியது. இதனால் பலூன்களின் எரிந்த ரப்பர் துண்டுகள் சுற்றியிருந்த பலரின் மீது விழுந்ததில் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையிடம் அனுமதி பெறாமல் விழா நடத்தியது, வெடிக்கும் பொருட்களை முறையாக கையாளாதது உள்ளிட்டவற்றிற்காக பாஜக பிரமுகர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.’

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments