Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் நடன இயக்குநர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு - போலீஸார் விசாரணை

பெண் நடன இயக்குநர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு -  போலீஸார் விசாரணை
, வியாழன், 8 அக்டோபர் 2015 (16:34 IST)
சென்னை வளசரவாக்கத்தில் தமிழ் திரைப்பட பெண் நடன இயக்குநராக இருக்கும் லலிதாமணிக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் மேள் தளத்தில் கஞ்சா செடிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.


 


சென்னை வளசரவாக்கத்தில் நடன இயக்குநர் லலிதாமணிக்கு சொந்தமாக இரண்டு அடுக்குமாடி வீடுகள் இருக்கிறது. இந்த வீட்டில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிலரும் அந்த பகுதியில் பணிபுரியும் சில இளைஞர்களும் வாடகைக்கு வசிக்கின்றனர். 
 
இந்நிலையில், அடிக்குமாடி வீட்டின்  மேள்தளங்களில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் அங்கு நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 5 பூ தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
இதுகுறித்து, அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தியதில், நடன இயக்குநர் லலிதாமணியின் உறவினர் ஒருவர்  வீட்டின் மேள் தளத்தில் வசித்து வந்தார். அவர் தான்  அந்த கஞ்சா செடிகளை வளர்த்தார் என்று  போலீஸாரிடம் கூறினர்.
 
இவர் சினிமாவில் உதவி இசையமைப்பாளராக இருக்கிறார் என்றும் தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் வளசரவாக்கம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil