Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை புரட்டி போட வரும் கஜா: வர்தா புயலை மிஞ்சுமா?

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2018 (10:07 IST)
புயல் என்றதும் நம் நினைவுக்கு வருவது சென்னையை தாக்கிய வர்தா புயல்தான். வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக மாறியுள்ளது. தற்போது வரவுள்ள புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, வானிலை அமைப்புகள் வங்கக் கடலில் உருவாகும் புயல் சென்னையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி நகரயுள்ளதாம். அதாவது, 13 அல்லது 14 ஆம் தேதிகளில் இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும். 
 
12 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் கஜா புயல் சென்னையின் தென்கிழக்கே 990 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
வடதமிழகம் - ஆந்திரா இடையே இந்த புயல் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments