Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக-மதிமுக இடையே விரிசலை ஏற்படுத்தியதா கஜா?

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (21:27 IST)
கஜா புயலினால் டெல்டா பகுதி மக்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களுக்கு விரிசலை ஏற்படுத்தியது போல திமுக மற்றும் மதிமுகவுக்கும் இடையிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கஜா புயல் நிவாரண பணியை சரிவர தமிழக அரசு செயல்படவில்லை என்றும், மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுவதில் சுணக்கம் காட்டி வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று முதல்வர் பார்வையிடவில்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார்.

ஆனால் திமுக தலைவர் மு,க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சூளுரைத்து வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 'கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், சீரமைப்பு பணிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து மாறுபட்ட கருத்துக்களை வைகோவும், ஸ்டாலினும் தெரிவித்திருப்பது இரு கட்சிகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments