Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகோவுடன், ஜி.ராமகிருஷ்ணன் திடீர் சந்திப்பு

வைகோவுடன், ஜி.ராமகிருஷ்ணன் திடீர் சந்திப்பு
, சனி, 4 ஜூலை 2015 (23:31 IST)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று சந்தித்து பேசினார்.
 

 
மதிமுக தலைமைக் கழகமான, தாயகத்தில் இன்று காலை 11 மணிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் கட்சி முன்னனி நிர்வாகிகள் வருகை தந்தனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வைகோ வரவேற்றார். பதிலுக்கு வைகோவிற்கு ராமகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்தார்.
 
இதனையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குழுவினரும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு காலை 11 முதல் 12 மணி வரை நடந்தது.
 
அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மத்திய, மாநில அரசுகளின் ஊழலுக்கு எதிராக மதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து கூட்டு குழு இயக்கம் தொடங்க முடிவு செய்துள்ளோம்.
 
இதற்காக, எங்களது கருத்துக்களை ஏற்கும் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறோம். இதற்காக முதலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து ஆதரவு கேட்டோம். அவர் தயங்காமல் ஆதரவு தெரிவித்துள்ளார் என்றார். அப்போது மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, டி.கே. ரெங்கராஜன் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil