Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிபிஐஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு

சிபிஐஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு
, சனி, 26 ஜூலை 2014 (19:55 IST)
முதல்வர் மீது அவதூறு பரப்பும் வகையில் பேட்டியளித்ததாக சிபிஐஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 22 ஆம் தேதி ஆங்கில நாளிதழ் ஒன்றில், மார்க்சிய கம்யூ. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில், மணல் கடத்தல் தொடர்பாக அதிமுக ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.  
 
அவரின் பேட்டி, முதல்வரின் மீது தமிழக மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 50 இன் (அவதூறு பரப்புதல்) கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil