Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று முழு ஊரடங்கு முடிந்த மதுரையில் இன்று மேலும் 295 பேர்களுக்கு கொரோனா

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (08:52 IST)
மதுரையில் இன்று மேலும் 295 பேர்களுக்கு கொரோனா
மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்ததால் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 14 வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருந்தது
 
இந்த நிலையில் நேற்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்து இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று முதல் மதுரை மற்றும் ஊரகப்பகுதிகளில், சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களை, பொது மக்கள் வழிபாட்டுக்கு திறந்திருக்கும் என்பதும், அனைத்து தொழிற்சாலைகளும், நுாறு சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நேற்றுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று மதுரையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,285 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் இதுவரை 2,667 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி  வீடு திரும்பி  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது மதுரையில் 3,199 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், மதுரையில் இதுவரை 124 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments