Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி எப்போது?

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (08:32 IST)
கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி எப்போது?
தமிழகத்தில் தற்போது மழை குறைந்து உள்ளதை அடுத்து சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை முதல் கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்திருந்தது
 
தற்போது மழை குறைந்துள்ளதால் நீர் வரத்தும் குறைந்து உள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக மாஸ்க் அணிதல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்.. தமிழக அரசு முடிவு

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பென்ட் ரத்து.. முதல்வர் தலையிட்டாரா?

தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்..! தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க கோரிக்கை..!!

தியானத்தில் இருந்து கொண்டே புயல் பாதிப்புகளை கேட்டறிந்த பிரதமர் மோடி! எப்படி சாத்தியம்? – நெட்டிசன்கள் கேள்வி!

ஒரே நேரத்தில் வானில் தெரியப்போகும் 6 கோள்கள் - எப்போது, எப்படி பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments