Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (10:46 IST)
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கும் என்ற தகவல் இதுவரை தமிழக அரசால் அறிவிக்கப்படவில்லை 
 
இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் 15ம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க இருப்பதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை அடுத்து ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பள்ளிக்கு எப்படி வருவது என்று ஆசிரியர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த கல்வியாண்டில் எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை என்பதால் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் புத்தகங்களை வைத்து தொலைகாட்சியில் நடத்தப்படும் பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே பாடப்புத்தகங்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments