Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும் பேருந்துகள் எவை எவை?

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (15:33 IST)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்த நிலையில் நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் பேருந்துகள் எவை எவை என்பதை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
நாளை முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும். 
 
ஈசிஆர்  வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து கிளம்பும்
 
தென் மாவட்டங்களுக்கு செல்லும் மற்ற போக்குவரத்து கழக பேருந்துகளும் ஆம்னி பேருந்துகளும் பொங்கல் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் 
 
கிளாம்பாக்கம் இருந்து தாம்பரத்திற்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும்  கிண்டிக்கு மூன்று நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் கோயம்பேட்டிற்கு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படும்
 
இவ்வாறு அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments