Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் பச்சை நிற ஆவின் பால் நிறுத்தம்.. இனி ஊதா நிற டிலைட் பால் மட்டுமே..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:38 IST)
நவம்பர் 24 வரை மட்டுமே பச்சை நிற பால் விநியோகம் செய்யப்படும் என்று பால்வளத்துறை அறிவித்திருந்த நிலையில் நாளை முதல் பச்சை நிற பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருந்த பச்சை நிற பால் உற்பத்தி செலவு அதிகம் காரணமாக நிறுத்தப்படுவதாக கூறப்பட்டது. அதற்கு பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு உள்ள ஊதா நிற பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

பச்சை நிற பாலின் விலை தான், ஊதா நிற பாலுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதும் ஆனால் ஒரு சதவீதம் ஊதா நிற பாலில்  கொழுப்பு சத்து குறைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் வாங்கும் பச்சை நிற பால் நிறுத்துவது குறித்த தமிழக அரசின் முடிவுக்கு பாஜக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் இன்றுடன் பச்சை நிற பால் நிறுத்தப்படும் என்ற முடிவில் இருந்து தமிழக அரசு பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments