Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத பூஜை லீவுக்கு ஊருக்கு செல்ல திட்டமா? இன்று முதல் ரயில் முன்பதிவு தொடக்கம்..!

Siva
செவ்வாய், 11 ஜூன் 2024 (09:29 IST)
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்லும் நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை விடுமுறைக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ள நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆயுதபூஜை அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை, 12ஆம்  தேதி சனிக்கிழமை விஜயதசமி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதை அடுத்து பொதுமக்கள் இந்த விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயுத பூஜைக்கு அக்டோபர் 9ஆம் தேதியே ஊருக்கு செல்ல திட்டமிடுபவர்கள் இன்று அதாவது ஜூன் 11ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஊருக்கு செல்பவர்கள் நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், 11 ஆம் தேதி ஊருக்கு செல்வார் நாளை மறுநாள் முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments