Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றுமுதல் நகரும் ரேசன் கடைகள்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (07:28 IST)
தமிழகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் 33,000 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் நகரும் ரேசன் கடைகள் தொடங்கவுள்ளது
 
முதல்கட்டமாக திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில், 43 நகரும் ரேஷன் கடை ஏற்கனவே தொடங்கப்பட்டு  வேன்கள் மூலம் ரேசன் அட்டைதாரரின் வீடுகளுக்கே சென்று, பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
 
இதேபோல, தங்கள் தொகுதியிலும், நகரும் ரேஷன் கடைகளை செயல்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், 3,501 நகரும் ரேஷன் கடைகளை தொடங்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
 
இதன்படி நகரும் ரேஷன் கடை திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு  சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார் என்பதும் இந்த திட்டத்திற்கு 9.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனமா? ராகுல் காந்தி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments