Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Siva
ஞாயிறு, 19 மே 2024 (07:16 IST)
தமிழகத்தில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 3 நாட்கள் அதி கனமழைக்கான ‛ரெட் அலர்ட்’  விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
இன்று முதல் மே 21ஆம் தேதி வரை கனமழை முதல் அதி கனமழை பெய்ய உள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக  
தமிழகத்தில் இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன முதல்   அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல் கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி  மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்பு என்றும், தூத்துக்குடி, ராமநாதபரம், மதுரை, சிவகங்கை, புதக்கோட்டை மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
அதேபோல் சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று வறண்ட வானிலையே காணப்படும் என்றும் இயல்பான வெப்பம் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments