இன்று 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (07:09 IST)
இந்த முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்குவதை அடுத்து மாணவர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 
 
கொரனோ வைரஸ் பாதிப்பில் இடையே 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளிவராததால் இன்று திட்டமிட்டபடி செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன
 
 மொத்தம் 28 வகையான பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது 
 
கிருமிநாசினி கொண்டு மாணவர்கள் கைகளை சுத்தம் செய்வது, ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி வசதிகள் செய்வது, ஆய்வக பொருள்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்படுவது, மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்வது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது 
 
இன்று தொடங்கும் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்றும் ஏப்ரல் 24 ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலகத்தில் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் ஒப்படைக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை.. இறப்பதற்கு முன் செய்த அதிர்ச்சி செயல்..!

பள்ளி மாணவர்களை தொழுகை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை

ராகுல் காந்தி ராணுவத்தை அவமதித்தாரா? பிரியங்கா காந்தி விளக்கம்

திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments