Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணை வளையத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (11:08 IST)
தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை. 

 
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலையீட்டின் பெயரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.
 
அதன்படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரையும் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்தார். 
 
அதன்படி  தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிப்பது பற்றி சிபிசிஐடி இன்று முடிவு. மேலும், சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments