Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை: வாய்மொழி உத்தரவு என தகவல்

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (11:41 IST)
தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் மட்டுமின்றி பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் இன்று காலை முதல் பல மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
 
இந்த நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்தக் கூடாது என காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, நெல்லை, தூத்துகுடி போன்ற மாவட்ட காவல் தலைமை பிரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸை விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கு மட்டும், அதுவும் தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக மொத்தமாக பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பையே கலைக்கவும் ஆலோசனை நடந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments