Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திரம் எஸ்.வி.சேகர்களுக்கு...திருமுருகன் காந்திகளுக்கில்லை : வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2018 (17:10 IST)
மே17 இயக்கத்தின் தலைவரான திருமுருகன் காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 
பெண் நிருபர்கள் தவறாக சித்தரித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை தேடி வருவதாக கூறிய போலீசார், அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
 
அதேநேரம், தூத்துக்குடி விவகாரம் குறித்து ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழலர் நலன் தொடர்பான கூட்டத்தில் பேசிவிட்டு சென்னை திரும்பிய திருமுருகன் காந்தியை போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால், நீதிமன்றம் கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்க, வேறு ஒரு வழக்கில் அதாவது 2017ம் ஆண்டு அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெரியார் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தனது கடைக்கு வெளிப்புறம் உள்ள பலகையில் “வாங்கிய சுதந்திரம் எஸ்.வி.சேகருக்கு கிடைத்தது. ஆனால்.. திருமுருகன் காந்திக்கு ஏன் கிடைக்கவில்லை?” என எழுதி வைத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments