Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திரம் எஸ்.வி.சேகர்களுக்கு...திருமுருகன் காந்திகளுக்கில்லை : வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2018 (17:10 IST)
மே17 இயக்கத்தின் தலைவரான திருமுருகன் காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 
பெண் நிருபர்கள் தவறாக சித்தரித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை தேடி வருவதாக கூறிய போலீசார், அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
 
அதேநேரம், தூத்துக்குடி விவகாரம் குறித்து ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழலர் நலன் தொடர்பான கூட்டத்தில் பேசிவிட்டு சென்னை திரும்பிய திருமுருகன் காந்தியை போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால், நீதிமன்றம் கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்க, வேறு ஒரு வழக்கில் அதாவது 2017ம் ஆண்டு அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெரியார் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தனது கடைக்கு வெளிப்புறம் உள்ள பலகையில் “வாங்கிய சுதந்திரம் எஸ்.வி.சேகருக்கு கிடைத்தது. ஆனால்.. திருமுருகன் காந்திக்கு ஏன் கிடைக்கவில்லை?” என எழுதி வைத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்? இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை? - அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments