Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தத்தெடுத்த கிராமங்களுக்கு இலவச வை–பை வசதி: கனிமொழி

தத்தெடுத்த கிராமங்களுக்கு இலவச வை–பை வசதி: கனிமொழி
, வியாழன், 1 அக்டோபர் 2015 (00:04 IST)
திமுக எம்.பி. கனிமொழி தத்தெடுத்த இரு கிராமங்களிலும் இலவச வை–பை வசதி செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக  எம்.பி. கனிமொழி வெளயிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மெய்யூர் கிராமம் ஆகியவற்றை நான் தத்து எடுத்து, எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வளர்ச்சித் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்த கிராமங்களுக்கு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் இணைய வை–பை வசதி ஏற்படுத்தித் தரப்படும். இந்த இரு கிராமங்களிலும் வை–பை கட்டமைப்பு ஏற்படுத்தும் செலவுத்தொகையை எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil