Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசனில் இலவச கபசுர குடிநீர் ! உயர்நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (21:19 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவி வந்த நிலையில் தற்போது இந்நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இருப்பினும் அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தற்போது, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்  கபசுர குடிநீர் பாக்கெட்டுகளை இலவசமாக விநியோகிக்கக் கோரிய விண்ணப்பத்தைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறக்குமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் இரண்டாம் தவணைத்தொகை மற்றும் இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் தமிழக அரசிடமிருந்து  விரையில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments