Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (20:03 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இன்று கூட 13 ஆயிரத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியை அரசு முடக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என சற்று முன் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
கொரோனா  பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இந்த தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் இலவசமாகவே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் போதுமான தடுப்பூசிகள் இருப்புகள் இருப்பதாக தமிழக அரசின் சுகாதார துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments